பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க…. உரிமைத் தொகை ரூ.1000 பெற மீண்டும் வாய்ப்பு….! ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி…?

Spread the love

தமிழக அரசு மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டு, அதில் விண்ணப்பித்த பலருக்கு உரிமைத் தொகை கிடைக்காத சூழல் நிலவுகிறது. அவ்வாறு விண்ணப்பித்தும் பணம் வராத தகுதியான பயனாளிகள் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு தற்போது வாய்ப்பளித்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு வசதியை இரண்டு வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்று, அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது பொதுச் சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். அல்லது வீட்டிலிருந்தபடியே www.kmut.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ‘குறைதீர்வு’ என்ற பகுதியைத் தேர்வு செய்தும் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பதாரரின் பெயர், குடும்பத் தலைவர் பெயர், குடும்ப அட்டை எண் மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களைக் கொடுத்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி (OTP) வரும். அதைப் பயன்படுத்திப் புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.

மேல்முறையீடு செய்யும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் வங்கிக் கணக்கு புத்தக விவரங்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். இவ்வாறு ஆன்லைன் வழியாகச் சமர்ப்பிக்கப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஆவணங்களைச் சரிபார்த்து, விண்ணப்பதாரர் தகுதியானவர் என்று உறுதி செய்த பின்னர், அவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இப்போது மேல்முறையீடு செய்ய முடியும். அதே போல, ஏற்கெனவே குறைதீர்வு மனு அளித்து அது நிராகரிக்கப்பட்டிருந்தால், அதே குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பிக்க இயலாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

2 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

2 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

4 மணத்தியாலங்கள் ago