மேற்கு கோதாவரி மாவட்டம், பீமவரத்தைச் சேர்ந்த லலிதாம்பிகா (20) மற்றும் குமுடவள்ளியைச் சேர்ந்த சந்தீப் குமார் (22) ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். சந்தீப் தனது பெற்றோருக்கு லலிதாம்பிகாவை அறிமுகப்படுத்தியதை அடுத்து, சந்தீப்பின் சகோதரியின் திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க இருவீட்டுப் பெரியவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், லலிதாம்பிகாவிற்குத் தீராத கடுமையான நோய் இருப்பது தெரியவந்ததால், மனமுடைந்த காதலர்கள் இருவரும் ஒன்றாக உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, வென்றா கிராமத்தில் உள்ள அடவிகோடுலா லாக்ஸ் அருகே உள்ள கால்வாயில் திங்கள்கிழமை இரவு இருவரும் குதித்தனர். இதில் லலிதாம்பிகா நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
https://twitter.com/TeluguScribe/status/2087075746967863456/video/1
அப்பகுதி மக்கள் சந்தீப்பை உடனடியாக மீட்டு பீமவரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லலிதாம்பிகாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…