இயற்கை பேரிடர்களால் நிகழும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மின்னல் தாக்குவதால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ‘மாபெரும் மின்சார பொறி’ என்று அழைக்கப்படுகிறது மின்னல். ஒரு மின்னல் 100 மில்லியனில் இருந்து ஒரு பில்லியன் ஓல்ட் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.
மின்னல் தாக்குதல் இந்தியாவில் மத்திய இந்தியா மற்றும் மத்திய கிழக்கு இந்திய மாநிலங்களில் அதிகமாக நடக்கிறது. எனவே மின்னல் தாக்கும்போது வீடுகளில் இருப்பதே மிக நல்லது. மழை பெய்து, இடி இடித்து, மின்னல் வெட்டுவது ஒரு இயற்கை நிகழ்ச்சி. தற்பொழுது மின்னல் தாக்குதல் ஒரு இயற்கை பேரிடராக உருவெடுத்துள்ளது.
பொதுவாக மின்னல் தாக்குவதை வீடியோ எடுப்பது என்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது. மும்பையில் உள்ள அப்பாச்சியில் சிம்பள்ளியில் நிமினார் எனும் இடம் உள்ளது. நேற்று பெய்த கன மழையால் அங்கு இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. அங்கு பெய்த கனமழையை எதிர்பாராத விதமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரின் செல்போனில் இந்த மின்னல் தாக்குதல் பதிவாகியுள்ளது.
கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் ஒன்று கட்டிடத்தை தாக்கியது. அந்த கட்டிடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் சேதங்கள் இன்றி கட்டிடம் தப்பித்தது. தற்பொழுது அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…