பகீர்!.. கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை.. கதறும் பெற்றோர்…!!!

Spread the love

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஹர்ஷித் என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் நேற்று காலை நாகமலை நோக்கி பாதயாத்திரை சென்றபோது, புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து அவனை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்தர்களும் வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், சிறிது தூரத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

இந்தக் கொடூரமான தாக்குதலில் சிறுவனின் உடலின் சில பாகங்களைச் சிறுத்தை கடித்துக் குதறியிருந்தது. வனத்துறையினரின் அலட்சியமே இந்தப் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள உள்ளூர் மக்களும் பக்தர்களும், அதிகாரிகளை முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்கொல்லியாக மாறியுள்ள அந்தச் சிறுத்தையை உடனடியாகச் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நாகமலை செல்லும் பாதையில் மலையேற்றம் செய்வதற்கு வனத்துறை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள், சிறுத்தையைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியான சிறுத்தை நடமாட்டத்தால் மாதேஸ்வரன் மலைக்கு வரும் பக்தர்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Muthu Mani

Recent Posts

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

11 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

17 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

18 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

21 minutes ago

“ரூ. 35 கோடி பேரம்.. குடும்பத்தோடு காலி பண்ணிடுவோம்”…. எம்எல்ஏ இளையராஜா வழக்கில் திடீர் திருப்பம்…. நள்ளிரவில் வெளியான அந்த ‘எப்ஐஆர்’ ரகசியம்..!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…

23 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுக MLA-க்கள் ராஜினாமா… பின்னணியில் தவெக? போட்டுடைத்த CPM…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…

27 minutes ago