பகீர்!.. கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை.. கதறும் பெற்றோர்…!!!

Spread the love

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஹர்ஷித் என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் நேற்று காலை நாகமலை நோக்கி பாதயாத்திரை சென்றபோது, புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து அவனை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்தர்களும் வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், சிறிது தூரத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

இந்தக் கொடூரமான தாக்குதலில் சிறுவனின் உடலின் சில பாகங்களைச் சிறுத்தை கடித்துக் குதறியிருந்தது. வனத்துறையினரின் அலட்சியமே இந்தப் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள உள்ளூர் மக்களும் பக்தர்களும், அதிகாரிகளை முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்கொல்லியாக மாறியுள்ள அந்தச் சிறுத்தையை உடனடியாகச் சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நாகமலை செல்லும் பாதையில் மலையேற்றம் செய்வதற்கு வனத்துறை தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள், சிறுத்தையைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியான சிறுத்தை நடமாட்டத்தால் மாதேஸ்வரன் மலைக்கு வரும் பக்தர்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Muthu Mani

Recent Posts

“சுக்கிரன்–செவ்வாய் காம்போ… தலைகீழாக மாறப்போகும் கிரகங்களின் நிலை…! பணமழையில் நனையப்போகும் ‘அந்த’ 3 ராசிகள்… லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா…?”

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் பல்வேறு ஜோதிட யோகங்கள் உருவாகி வரும் வேளையில், குறிப்பாக ஜூலை 29 அன்று சுக்கிரனும்…

2 minutes ago

மாற்றுத்திறனாளிகளுக்கு ‘மாஸ்’ நியூஸ் சொன்ன தமிழக அரசு… “ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்…!!”

தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வரும் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்…

8 minutes ago

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

9 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

9 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

9 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

9 மணத்தியாலங்கள் ago