CINEMA
அயன் படத்தில் நான் நடிக்க வேண்டியது, இதனால் தான் நடிக்கல … பல வருடங்களுக்கு பின் உண்மையை சொன்ன பிரபல நடிகர்
2007 ஆம் ஆண்டு இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, ஜெகன், பிரபு, ஆகாஷ்தீப் சாயிகள் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான் அயன். கே.வி.ஆனந்த் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை தமிழ் சின் இமாவில் பிடித்தார். வைரம் கடத்தும் கதாநாயகனே கஸ்டம்ஸ் ஆபிசர் ஆகும் கதை தான் அயன்.
போதை பொருள், தங்க பிஸ்கட், வைரம் கடத்தும் கதையை இவ்வளவு அழகாக தமிழ் சினிமாவில் யாரும் கொடுத்தது இல்லை. ஒவ்வொரு காட்ச்சியும் செதுக்கி இருந்தார் கேவி.ஆனந்த். சூர்யாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் வில்லனாக வரும் கமலேஷ் கதாபாத்திரத்தையும் மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் நம் நண்பர்களை கலாய்க்க வேண்டும் என்றால், நாட்டுல வச்சேன்னு நினைச்சியா, லட்டுல வச்சேன் தாஸ் என்னும் வசனத்தை மறக்காமல் பயன்படுத்துவோம்.
அப்படி தமிழ் மக்கள் கொண்டாடிய ஒரு வில்லன் கமலேஷ். ஹிந்தி நடிகர் ஆகாஷ்தீப் சாய்க்ள் அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். ஆனால் கமலேஷ் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து நடிகர் அஜய் கபூர் தான், ஆம் இவர் தான் கமலேஷ் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசி இருந்தார். இவர் வேறு யாரும் அல்ல, கோலங்கள் நாடகத்தில் ஆதி என்னும் கார்ப்பரேட் வில்லனாக நடித்து நம் மனதில் இடம் பிடித்தவர் தான்.
இவர் சமீபத்தில் அயன் படம் குறித்த சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார், அதாவது கமலேஷ் கதாபாத்திரத்துக்கு கே.வி.ஆனந்தின் தந்தை இவரை தான் பரிந்துரைத்தாராம். கே.வி.ஆனந்தும் இவரை அணுகியுள்ளார் ஆனால் கோலங்கள் நாடகத்தில் பிசியாக இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் நோ சொல்லிவிட்டாராம். ஆனால் கே.வி.ஆனந்தோ சரி, ஆனால் கமலேஷ் கதாபாத்திரத்துக்கு நீ தான் டப்பிங் பேசணும் என சொல்லி டப்பிங் பேச வைத்துள்ளார்.
இது குறித்து அஜய் கூறும்போது, டப்பிங் முடித்தவுடன் என்னை கட்டிப்பிடித்த கே.வி.ஆனந்த் சார், நீ கமலேஷுக்கு உயிர் கொடுத்து விட்டாய் என பாராட்டினார். அயன் பார்த்துவிட்டு இதில் நடிக்க முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டேன் என கூறியுள்ளார் கோலங்கள் அஜய்.