“அண்ணாமலைக்கு பயம் வந்துடுச்சு.. அதான் ஓடி ஒளிஞ்சுகிட்டாரு”… பாஜகவை நக்கல் செய்த கனிமொழி… பரபரக்கும் அரசியல் களம்…!!

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சமீபத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோவையில் வானதி சீனிவாசனுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை போட்டியிடாததை அவரே உறுதி செய்துள்ளார். 2021 மற்றும் 2024 தேர்தல்களில் சந்தித்த தோல்விகள் மீண்டும் தொடர்ந்தால் தனது அரசியல் பிம்பம் பாதிக்கப்படும் எனக் கருதி அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டாரா என்ற பேச்சுகளும் கிளம்பியுள்ளன. இதற்கிடையே, புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென டெல்லிக்குச் சென்றது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குத் தேசிய அளவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்களும் கசிந்து வருகின்றன. இருப்பினும், கட்சி அறிவித்துள்ள வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் அண்ணாமலையையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற அச்சத்தின் காரணமாகவே அண்ணாமலை போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதாகக் குறிப்பிட்ட கனிமொழி, திமுக தேர்தலைக் கண்டு ஒருபோதும் பயப்படவில்லை என்றார். மேலும், வெற்றி நமதே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் திமுக தேர்தல் களத்தில் பணியாற்றி வருவதாகவும், பயம் என்பது பாஜக தரப்பில்தான் குடி கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Muthu Mani

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago