CINEMA
‘கலைஞர் 100 நிகழ்ச்சி’… விஜய் வரத விடுங்க.. அஜித் கண்டிப்பா வர மாட்டாரு போல.. பின்ன, இப்படியா அழைப்பு விடுக்கிறது..?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இரு முக்கிய நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய். இவர்கள் தங்களது ரசிகர்களால் தல மற்றும் தளபதி என்று கொண்டாடப்பட்டு வருகின்றனர். அடுத்தடுத்த இவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்களை எதிர்பார்த்தும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். தற்பொழுதுதான் லியோ எனும் வெற்றி படத்தை கொடுத்திருந்தார் நடிகர் விஜய்.
இதை தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 திரைப்படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் அஜித் ‘துணிவு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்பு தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தற்பொழுது அஜர்பைஜானில் படமாக்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சாதனைகளை கொண்டாடும் விதமாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. கலைஞர் கருணாநிதியின் திரைப்பயணம் மற்றும் அவரது சாதனைகளை கொண்டாடும் விதமாக கலைஞர் 100 நிகழ்ச்சியை நடத்த திரைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான திரைத்துறை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், உச்ச நட்சத்திரங்கள், மூத்த நடிகர்கள் உள்ளிட்டோருக்கு நேரில் சென்று அழைப்பு விடுவிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்க்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர். அதேபோல நடிகர் அஜித்குமார் தற்பொழுது அஜர்பைஜானில் இருப்பதால் அவருக்கு கடிதத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அஜித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.