Connect with us

CINEMA

‘காதல்’ படத்தால் என் வாழ்க்கையில் நான் இதையெல்லாம் இழந்துவிட்டேன்… நடிகை சந்தியா பகிர்ந்த தகவல்!

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது சந்தியா தான். அந்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. சந்தியாவின் உண்மையான பெயர் ரேவதி. இவர் சினிமாவிற்காக சந்தியா என்ற தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

கேரள மாநிலம் கொச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவருக்கு ராகுல் என்ற ஒரு அண்ணனும் உள்ளார். காதல் படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகையாக்க, அடுத்தடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஒரு கட்டத்தில் தனக்கான மார்க்கெட்டை இழக்க திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

   

இந்நிலையில் காதல் படத்துக்கு தான் ஹீரோயினாக தேர்வானது எப்படி என்பது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “காதல் பட ஷூட்டிங்கின் போது நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். அந்த கதைக்கும் ஒரு பள்ளி மாணவி தோற்றம்தான் தேவை என்பதால் என்னைத் தேர்வு செய்தார்கள். அதனால் பள்ளியில் ஒரு 20 நாட்கள் லீவ் எடுத்துக் கொண்டு நடிக்கலாம் என முடிவு செய்தோம்.

ஆனால் அது எப்படி எல்லாமோ சென்று கடைசில் ஸ்கூலில் இருந்து ட்ராப் அவுட் ஆகிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். காதல் படம் வெற்றி பெற்றதால் அவரின் சினிமா கேரியர் நல்ல படியாக அமைந்தது. ஒருவேளை தோல்வி அடைந்திருந்தாலும் படிப்பும் போய் சினிமாவில் எதிர்காலமும் இல்லை என்ற நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கும். எல்லோருக்கும் பள்ளிக்காலம் என்பது படிப்பை தாண்டி மிக மகிழ்ச்சியான காலகட்டம். சினிமாவுக்காக அதை அவர் இழந்திருப்பது அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அவரின் இந்த வீடியோ நேர்காணல் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top