Connect with us

CINEMA

25 வருஷமா சினிமால இருக்குற என்கிட்டே இப்டி கேக்குறாங்க.. ரொம்ப கேவலமா இருக்கு.. தமிழ் சினிமா குறித்து ஜோதிகா ஓபன் டாக்..

நடிகை ஜோதிகா, தமிழ் படங்களில் இவரது படங்களை ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள். இப்போதும் இவர் நடிப்பை ரசிக்கிறார்கள். மிக இயல்பான, யதார்த்தமான நடிப்பை தரும் நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின், சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஆனாலும் அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெற்று வருகிறது.

Jyothika

Jyothika

   

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ஜோதிகா கூறியதாவது, நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய நடிகர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் மலையாளத்தில், நடிகர் மோகன்லாலுடன் நடித்தது மிகவும் வித்யாசமான அனுபவம். மம்முட்டியின் உறுதி, தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கும் பெரிய பெரிய படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வருது. ஆனா இதை நான் சொல்லியே ஆகணும். என்னை சில படங்களில் ஏன் நடிக்க கேக்கறீங்க, எனக்கே கேவலமா இருக்கு என்று கேட்டிருக்கிறேன். படத்தில் இரண்டு, மூன்று சீன் வந்தாலும் எனக்கு நல்ல கேரக்டர் ரோல் கொடுங்க, சும்மா ஹீரோ கூட நின்னுட்டு போற மாதிரியான கேரக்டர் எல்லாம் நான் பண்ண மாட்டேன்.

Jyothika

Jyothika

மலையாள படத்துல, ஹீரோவுக்குல சமமான ரோல் கொடுக்கறாங்க. காதல் தி கோர் படத்துல மம்முட்டிக்கு சமமான ஒரு கேரக்டர் எனக்கும் இருந்தது. என்னோட அந்த கேரக்டருக்கு ஒரு மரியாதை, மதிப்பு இருந்தது. அதனால்தான் அந்த படத்துல நடிச்சேன். பெரிய நடிகர், பெரிய டைரக்டர், பெரிய படம் என்ற வகையில் என் கேரக்டரும் பெரிய அளவில் இருந்தது சந்தோஷமாக இருந்தது. கேரக்டர் சிறியதாக இருந்தாலும், அது மதிப்புள்ளதாக இருக்கணும். அப்படிப்பட்ட கேரக்டர்ல நான் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top