Connect with us

CINEMA

“சிவகார்த்திகேயன், இன்னொரு பிரபுவாக மாறுவார், இமானை அவர் மிரட்டிய ஆதாரம் ரெக்கார்டு இருக்கு”.. பகீர் கிளப்பிய பிரபலம்..

இசையமைப்பாளர் இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியதை அடுத்து, தமிழ் சினிமாவில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் குறித்த பல தகவல்களை கூறி வருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பிஸ்மி கூறியதாவது, சிவகார்த்திகேயனை பொருத்த வரை இனி அடுத்தடுத்து வரும் அவர் படங்களுக்கு மிகப்பெரிய கண்டம் காத்திருக்கிறது. அயலான் படம் கூட அவருக்கு பெரிய வெற்றியை தரப்போவது இல்லை. Actor Sivakarthikeyanபெண்கள் விஷயத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் பெயர் கெட்டுவிட்டாலே பிறகு அவர்கள் படம் சரியாக ஓடாமல் மார்க்கெட் இழந்து விடுவர்.அவர்களது உண்மை முகம் தெரிந்துவிட்டால், ரசிகர்கள் அவர்களை அலட்சியப்படுத்தி விடுவர். ஒரு காலகட்டத்தில், பிரபு படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்து புகழின் உச்சியில் இருந்தார். குஷ்புவுடன் அவருக்கு இருந்த உறவு வெளியே தெரிய வந்ததை அடுத்து, அவரால் மறுபடியும் தனது பழைய இடத்தை பிடிக்கவே முடியவில்லை. நடிகர் பார்த்திபனையும் மனைவி சீதாவை விவகாரத்து செய்த வகையில், அதே நிலையை அடைந்தார். Actor Sivakarthikeyanதம்பி மாதிரி பழகிய ஒருவருக்கு, நம்பிக்கை துரோகம் செய்த ஒருவரை மக்கள், மன்னிக்க மாட்டார்கள். அதுவும் சிம்பு, தனுஷ் போன்றவர்களாக இருந்தால், பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நம்ம வீட்டு பிள்ளையாக நினைத்த சிவகார்த்திகேயனா இப்படி என பலரும், அதிர்ச்சியடைந்து விட்டனர். இதுவரை சிவகார்த்திகேயன் இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். இமான் பேசிய அந்த வீடியோ வெளியான பிறகு, அடுத்த நாள் இரவு, சிவகார்த்திகேயன், இமானை போனில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த வீடியோவை டெலிட் செய்து விடுமாறு முதலில் வேண்டுகோளாகவும், பின்னர் மிரட்டும் தொனியிலும் அவர் பேசியதற்காக ரெக்கார்டு ஆதாரம் இருக்கிறது. இவர் மீது பழி போட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை, என்று கூறி இருக்கிறார் பிஸ்மி.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top