CINEMA
“அண்ணன் அறிவானவன்… தம்பி அடங்காதவன்”… நேரலையில் மகனகள் குறித்து ஓபனாக பேசிய தந்தை மோகன்..
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது சகோதரர் மோகன் ராஜா ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தந்தை மோகனும் திரையுலகை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் எடிட்டராக இருந்த மோகன் திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்தார்.
இவர் வரலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன்கள் ராஜா மற்றும் ரவி ஆகியோர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மோகன் அவரது மகன்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி ஆரம்ப காலத்தில் மோகன் கொஞ்சம் கஷ்டமான நிலையில் இருந்த சமயத்தில் ராஜா பிறந்தாராம்.
அதனால் ராஜா மிகவும் பொறுப்பாகவும் அமைதியாகவும் இருப்பார் என்றும் கொஞ்சம் வசதியான பின்பு ஜெயம் ரவி பிறந்ததால் அவர் அப்படியே எதிராக இருப்பார். வீட்டிலேயே இருக்க மாட்டார். என் மூத்த மகன் அறிவானவர் என்றால் இளைய மகன் அடங்காதவன் என மிகவும் கலகலப்பாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.