Categories: சினிமா

நான் புதுமுக இயக்குனர்களோடு பணியாற்றுவதில் உள்ள சுயநலம்… சக்ஸஸ் சீக்ரெட்டைப் பகிர்ந்த ஜெயம் ரவி!

Spread the love

இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் மினிமம் கியாரண்டி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் ஜெயம் ரவி.தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரது தந்தை மோகன் பிரபல எடிட்டர் ஆவார். அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் ஆவார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

கடைசியாக இவர்கள் கூட்டணியில் உருவான  தனி ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விரைவில் தனி ஒருவன் 2 திரைப்படமும் உருவாக உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகிழ்ச்சியாக நட்சத்திர தம்பதிகளாக சென்றுகொண்டிருந்த இவர்கள் சமீபத்தில் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர்.

ஜெயம் ரவி, கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் கூட அவரின் தனிப்பட்ட வெற்றி என்று சொல்ல முடியாது. விவாகரத்துக்குப் பின்னர் இப்போது ஜெயம் ரவி மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மீண்டும் தன்னுடைய வெற்றிப் பாதைக்கு திரும்ப ஆர்வமாக உள்ளார்.

#image_title

அவர் நடிப்பில் பிரதர் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் திரைப்பட வாழ்க்கையில் அதிகளவில் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்தது பற்றிய சீக்ரெட்டை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் “நான் புதிய இயக்குனர்களை நம்பி அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்ததில் ஒரு சுயநலமும் உள்ளது. ஏனென்றால் அவர்கள்  ஒரு கதையைக் குறைந்தது இரண்டு வருடமாவது செதுக்குவார்கள். நான் அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு இருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பேன்.

பிரதீப் என்னிடம் கோமாளி கதையை சொன்னபோது கூட நான் அவரை ஒரு சீனை எடுத்துக் காட்ட முடியுமா என்றுதான் கேட்டேன். அவன் சரியாக எடுத்து வந்து கொடுத்தேன். அதில் சவுண்ட், கேமரா கோணம் எல்லாமே சரியாக இருந்தது. அதனால் நான் அவன் ஷூட் செய்யும்போது எந்த தொந்தரவும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

15 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

23 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

29 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

41 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

59 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago