CINEMA
கேப்டன் மகனுக்கு நடந்த நிச்சயதார்த்தம் என்னாச்சு..? 3 ஆண்டுகளாக திருமணம் நடக்காதது ஏன்..? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..
நடிகர் விஜயகாந்த், கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் இருவருக்குமே திருமணம் ஆகவில்லை. ஆனால், கிறிஸ்டினா எனற பெண்ணை சண்முக பாண்டியன் காதலிப்பதாகவும், விஜயபிரபாகரனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் ஒரு தகவல் பரவியது. ஒரு பெண்ணுடன் விஜயபிரபாகரன் அருகில் அமர்ந்திருப்பது போலவும், அவர்களுக்கு பிரேமலதா பூக்களை தூவி ஆசிர்வதிப்பது போலவும் அந்த புகைப்படத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தனக்கு அப்படி எந்த நிச்சயதார்த்தமும் எதுவும் நடக்கவில்லை என விஜய பிரபாகரன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இதுகுறித்து விஜயபிரபாகரன் கூறியதாவது, என்னை பற்றியும், தம்பி குறித்தும் இரண்டுவிதமான ரூமர் பரவியுள்ளது. அவங்க பேர் கிறிஸ்டினா சபீனா. எங்க நிறுவனத்தில் 10 வருஷமா ஒர்க் பண்றாங்க. அவங்க லைப் ரஷ்யாவுல இருக்கு. நாங்க எல்லாம் ஒண்ணா ஒர்க் பண்றோம். வெளியில போவோம். ஒண்ணா சாப்பிடுவோம். அதை பார்த்துட்டு தம்பிக்கும், கிறிஸ்டினாவுக்கும் லவ்வுக்கு கிளப்பி விட்டுட்டாங்க. அது உண்மை கிடையாது. அவங்க பிரண்டாதான் பழகுனாங்க.
அதே மாதிரி எனக்கு 3 வருஷத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், நான் கல்யாணத்துக்காக வெயிட் பண்றதாகவும் ஒரு புரளி இருக்குது. பெண் பார்க்க போனது உண்மைதான். ஆனால் நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கலை. ஆனால்,மோடி தேதிக்காக நாங்க வெயிட் பண்றோம். என் கல்யாணத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்து எனக்கு தாலி எடுத்துக் கொடுக்கமுன்னு நாங்க வெயிட் பண்றதாகவும் வதந்தியை கிளப்பி விடறாங்க.
அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கலை. திருமணத்துக்காகவும் நான் வெயிட் பண்ணலை. என்னவாக இருந்தாலும் கேப்டன் ஊரை கூப்பிட்டு சொல்லிதான் எங்க கல்யாணத்தை பண்ணுவார். எல்லோருக்கும் சோறு போட்டுதான் எங்க கல்யாணத்தை நடத்துவார். அந்த போட்டோவுல அப்பா இருக்க மாட்டார். அது நிச்சயதார்த்தமும் இல்லை, என்று கூறியிருக்கிறார் விஜய பிரபாகரன்.