மலையாள சினிமாவின் கொடுமுடிகளாக கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றனர் மம்மூட்டியும் மோகன்லாலும். கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களாகக் கொடுத்த மம்மூட்டி தற்போது அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார். சமீபத்தில் ரிலீஸான அவரின் ப்ரமயுகம் படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து கலக்கிவருகிறது.
தற்போது 73 வயதானாலும் கொஞ்சம் கூட அசராமல் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தமிழிலும் பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருந்தது. இதுவரை 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இப்போதும் வருடத்துக்கு 5 படங்கள் அளவுக்கு நடிக்கிறார்.
தமிழ் தாண்டி பிறமொழிகளில் மம்மூட்டி நடிக்கிறார். தமிழில் அவர் அழகன், தளபதி, ஆனந்தம் மற்றும் பேரன்பு என தரமான படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மம்மூட்டிக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதை மம்மூட்டியின் மக்கள் தொடர்பாளர் மறுத்தார். ஆனால் அவருக்கு சிறு உடல்நலப் பிரச்சனை என அவரின் சகநடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மம்மூட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தம்பி ஆண்டனி அவருக்குப் பெருங்குடல் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் முகநூல் பதிவில் “ 50 வயதைத் தாண்டிய அனைவரும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலன்கோபி சோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் மூலம் பெருங்குடல் புற்ற்நோயைக் கண்டுபிடிக்கலாம். அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு மூலமாக இதைக் குணப்படுத்தலாம். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட பலரும் அதன் பல ஆண்டுகள் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். நமது மம்மூக்காவும் சிகிச்சைப் பெற்று மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வருவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.” எனக் கூறியுள்ளார். தற்போது சென்னை மருத்துவமனையில் இருக்கும் மம்மூட்டி விரைவில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…