தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்பொழுது இவர் தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் வாரி குவித்தது.
சமீபத்தில் சூரரைப்போற்று திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் புராணக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார் .
கங்குவா படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா தனது உடல் எடையை பல மடங்கு கூட்டிய புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் அவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.அவரது பிறந்த நாளை ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவில் பல்நாடு மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி கட்டவுட் வைத்த பொழுது மின் கம்பி மோதி கட்டவுட்டில் மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன், சாய் என்ற நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இருவர் உயிரிழந்தனர். தற்போது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை அடுத்து,…
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…