அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின் அபாரமான சோனார் திறனைப் பயன்படுத்தி, அவற்றின் முதுகில் வெடிமருந்துகளைப் பொருத்தி கடலடியில் தாக்குதல் நடத்த இந்த நூதன பிளான் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் சோவியத் யூனியனிடம் இருந்து இத்தகைய பயிற்சி பெற்ற டால்பின்களை ஈரான் வாங்கியதாகக் கூறப்படும் நிலையில், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய குறைந்த செலவுடைய போர் முறையை அந்நாடு கையில் எடுத்துள்ளது.
டால்பின்கள் மட்டுமின்றி, கடலடியில் உள்ள தொலைத்தொடர்பு கேபிள்களைத் துண்டிப்பது மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவது போன்ற மிரட்டல்களையும் ஈரான் விடுத்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா அதிநவீன ‘சீ ட்ரோன்கள்’ மற்றும் தானியங்கி நீர்மூழ்கி வாகனங்கள் மூலம் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. எவ்வித அச்சுறுத்தலையும் முறியடிக்க அமெரிக்க கடற்படைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் இந்த ‘டால்பின் போர் தந்திரம்’ எந்தளவுக்குப் பலன் தரும் என்பது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…