அமெரிக்க அதிபரை படுகொலை செய்ய ஈரான் முயற்சித்தால், அந்நாட்டின் மீது 1,000 ஏவுகணைகளை ஏவி மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை படுகொலை செய்ய ஈரான் புதிய திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரேல் எச்சரித்ததாக வெளியான தகவல்களையும், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் தனக்கு எதிராக ஏந்தப்பட்ட பேனர்களையும் சுட்டிக்காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தான் நீண்ட காலமாகவே ஈரானின் இலக்குப் பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேல் தனக்கு புதிய உளவுத் தகவல் எதையும் தற்போது அளிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் இதுகுறித்து மேலும் விளக்கியுள்ள அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிலான கடுமையான தாக்குதலை நடத்த அமெரிக்கா ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆரம்பகட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவ அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர ஈரான் விரும்பினாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், இந்த ராணுவத் தாக்குதலுக்கான உத்தரவு ஓராண்டு வரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…