அமெரிக்காவில் நபர் ஒருவர் இந்தியத் தேசியக் கொடியைக் கிழித்து எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பையும் நெட்டிசன்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலைக் கண்டித்து பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில், இந்த விவகாரம் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள் (Immigration) குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் இந்தியக் கொடியை அவமதிப்பதைக் கண்டு அங்கிருந்த இந்திய வம்சாவளியினர் மற்றும் பிறர் அவரைத் தடுக்க முயல்கின்றனர். இந்தச் சம்பவம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அடையாளமான தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானம், சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனக் குரல்களாக வெடித்துள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வருபவர்களின் பின்னணி குறித்தான விவாதங்கள் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளன. நெட்டிசன்கள் பலரும் இத்தகைய வெறுப்புணர்வைத் தூண்டும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குடியேற்ற விதிகளில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…