மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளின் தளங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், இஸ்ரேலும் அமெரிக்காவுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால், மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்த தீவிர சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்காகவும், ஈரானுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்காகவும் அவசரப் பயணக் கட்டுப்பாட்டு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஈரானில் வன்முறை மற்றும் நிலையற்ற தன்மை அதிகரித்து வருவதால், இந்தியர்கள் பாதுகாப்பு நிலைமை சீரடையும் வரை ஈரானுக்கான அனைத்து விருப்பப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு தூதரகம் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள் தங்களின் சொந்தப் பாதுகாப்பைக் கருதி, அங்கிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கே தொடர்ந்து தங்கியிருக்கத் தீர்மானித்துள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையின்றி வெளிநடமாட்டம் செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உள்ளூர் ஊடகச் செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகத்தின் பாதுகாப்பு அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யாத நபர்கள் உடனடியாக தங்கள் விவரங்களைப் பதிவு செய்யுமாறும், தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தைப் பின்தொடர்ந்து அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுமாறும் இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…