ஒரு பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் அவளுக்குத் தெரியாமல் அமைதியாகத் தொடர்ந்து வந்தான். சில நொடிகளில், சரியான வாய்ப்பைப் பார்த்து அவளது கைப்பையைக் கைபற்றிவிட்டுத் தப்பி ஓடிவிட்டான். இந்த முழு சம்பவமும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலையில் நடந்து செல்லும்போது எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். யாராவது உங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தால், உடனடியாக ஆட்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் அல்லது அருகில் உள்ளவர்களிடம் உதவி கேளுங்கள்.
https://twitter.com/RoyalCheckOut/status/2083499260969169226/video/1
உங்கள் கைப்பை, கைப்பேசி மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பகுதிகளில் தனியாகச் செல்லும்போது, சிறு சந்தேகத்திற்குரிய நடவடிக்கையைக் கூட அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையாக இருங்கள். சிறிய விழிப்புணர்வு கூட பெரிய அசம்பாவிதத்தைத் தடுக்கும்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…