Connect with us

TRENDING

அவர் சொன்னதால, இளையராஜா என் கால்ல விழுந்தாரு.. பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..

நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சினிமா சார்ந்த பல தகவல்களை யூடியூப் சேனல்கள் வாயிலாக பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பயில்வான் ரங்கநாதன் இசைஞானி இளையராஜா குறித்து கூறியதாவது, இளையராஜா ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் திமிரும், அகங்காரமும் இளையராஜாவுக்கும் உண்டு. பிரபலமானவர்களில் ஒரு சிலர் அதில் விதிவிலக்காக இருக்கலாம். எல்லோருக்கும் இருக்கும் திமிரும் அகங்காரமும் அவருக்கும் இருந்தது. சில நேரங்களில் அதை பத்திரிகையாளர் சந்திப்பில் அதை வெளிப்படுத்துவார். நாம் ஏதாவது கேள்வி கேட்டால், உனக்கு இசையை பற்றி ஏதாவது தெரியுமா என நம்மை பார்த்து கேள்வி கேட்பார். இப்படி பல நேரங்களில் நான் அவருடன் நேரடியாகவே மோதி இருக்கிறேன்.

   

பல வருடங்களுக்கு முன் ஒரு சரஸ்வதி பூஜை. எங்களை பிரஸ்மீட் வைத்து இளையராஜா அழைத்திருந்தார். பிரசாத் லேப்பில் பிரஸ்மீட் நடந்தது. அப்போது யதார்த்தமாக நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். இலங்கையில் இவ்வளவு தமிழர்கள் அவதிப்படுகிறார்கள், தனிநாடு கேட்டு போராடறாங்க, அதைப்பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டேன். எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லிட்டார். பத்திரிகைகள் படிக்கறிங்களா, இல்லையான்னு கேட்டதற்கு பத்திரிகை எல்லாம் நான் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். இப்படி பதில் பேசிட்டார். இது வளர்ந்துகிட்டே போய், கடைசியில இலங்கையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதுப்பா, அப்படீன்னு சொல்லிட்டார்.

அப்போது இளையராஜா கூட அவர் தம்பி கங்கை அமரன் இருக்கிறார். அவர்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறார். அப்போது கங்கை அமரன், அங்கிருந்த எங்களிடம் அண்ணன் ஏதோ கோபத்துல இருக்கிறார். அவர் பேசறதை எல்லாம் பெருசு பண்ணாம இப்படியே விட்டுடுங்க எனக் கேட்டுக்கொண்டார். நான் இளையராஜாவின் முதல் படத்தில் இருந்து இருக்கிறேன். அப்போ பத்திரிகையாளர்கள் வந்து ஒரு 20 பேர்தான் இருப்போம். அப்போது பஞ்சு அருணாசலம் என்ன சொன்னாருன்னா, ஏம்பா, இவங்கதான் உன்னை உருவாக்கறது.

இளையராஜாங்கற உன்பேரை மக்கள் கிட்ட கொண்டு போறது, விமர்சனம் பண்றது எல்லாமே இவங்கதான். இவங்க காலை தொட்டுக் கும்பிடு என்றார். எல்லோரது காலையும் அவர் தொட்டுக் கும்பிட்டார். அப்போது நானும் அங்கு இருந்தேன். என் காலை அவர் தொட்டு கும்பிட்டதால் நான் பெரிய ஆள் என்று அர்த்தம் இல்லை. அவர் இசைஞானிதான். தமிழ் சினிமா இசை என்றால் இளையராஜா பெயர்தான் இருக்கும். அது காலத்தால் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டது. அது யாராலும் அழிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Sumathi
Continue Reading

More in TRENDING

To Top