ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், அந்த அணியிலிருந்து விலக முடிவு செய்த பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அம்பானி தரப்பிலிருந்து அவருக்குப் மிகப்பெரிய ஆஃபர் வழங்கப்பட்டதாக அவரது தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் கேப்டன்சி கனவுகளுக்கு வழிவிடும் வகையில் சஞ்சு இந்த முடிவை எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் மட்டுமின்றி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளும் அவருக்குக் கேப்டன் பதவியுடன் கூடிய வாய்ப்புகளை வழங்க முன்வந்தன.
இருப்பினும், இந்த அணிகளின் போட்டிகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சஞ்சு சாம்சனைத் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் சிஎஸ்கே இந்த ரேஸில் இல்லாதபோதும், இறுதியில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் மற்ற அணிகள் வழங்கிய கேப்டன் பதவியை விட, சிஎஸ்கே அணியில் ஒரு வீரராக இணைந்து விளையாடுவதையே அவர் பெருமையாகக் கருதுகிறார். மார்ச் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சஞ்சு சாம்சன் தனது முன்னாள் அணியான ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து சிஎஸ்கே சீருடையில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…