மத்தியப் பிரதேச மாநிலம் ததியாவில், திருமணமான 16 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனைக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 6-ம் தேதி சிந்த நதி பாலத்தின் அடியில் புதர்களுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஹன்ஸ்ராஜ் வர்மா என்ற 35 வயது இளைஞரின் சடலமே இந்த வழக்கிற்குத் தொடக்கமாக அமைந்தது. ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத சடலமாக இருந்ததால் போலீஸார் அதைப் புதைத்திருந்தனர். பின்னர் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், ஹன்ஸ்ராஜின் மனைவி பபிதா வர்மாவுக்கும், அவரது உறவினர் ஹேமந்த் ஆர்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது கணவர் மது அருந்திவிட்டுத் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறிய பபிதா, தனது காதலனுடன் சேர்ந்து ஹன்ஸ்ராஜைக் கொல்லத் திட்டம் தீட்டினார். இதன்படி, பிப்ரவரி 5-ம் தேதி ஹேமந்த் மற்றும் அவரது நண்பர் அனில் ஆகியோர் ஹன்ஸ்ராஜை மது அருந்த அழைத்துச் சென்று, வழியிலேயே மஃப்ளரால் அவர் கழுத்தை நெரித்துக் கொன்று புதரில் வீசியுள்ளனர். செல்போன் அழைப்புத் தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், மனைவி பபிதா, காதலர் ஹேமந்த் மற்றும் கூட்டாளி அனில் ஆகிய மூவரையும் போலீஸார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…