“மதுராந்தகம் மட்டும் போதுமா?”… 36 தொகுதிகளை கோட்டை விட்ட எடப்பாடி… அதிமுகவில் வெடித்த திடீர் கலகம்….!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் செயல்பாடுகள், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் சென்னை மண்டல நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஆசியானெட் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் கொங்கு மண்டலத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், சுமார் 40 தொகுதிகளைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாகத் திட்டமிட்டு வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் அந்தப் பகுதிகளில் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகள் தொடர்பாக அவர் காட்டும் மெத்தனப் போக்கு கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2021 தேர்தலிலேயே இப்பகுதியில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை மண்டல நிர்வாகிகள் தரப்பில், எடப்பாடி பழனிசாமி இப்பகுதியைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்குவதற்குப் பின்னணியில் ஒரு அரசியல் காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, சென்னை மண்டலத்தில் உள்ள முக்கியத் தொகுதிகளை பாஜக கோருவதாகவும், அதற்கு எடப்பாடி தரப்பு பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் இணங்கிப் போவதாகவும் செய்திகள் பரவுகின்றன. இது தங்களின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என சென்னை மண்டல அதிமுக நிர்வாகிகள் கொதிப்படைந்துள்ளனர்.

தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி பெயரளவில் எச்சரித்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “கொங்கு மண்டலம் மட்டும் இனிக்குதா? சென்னை மண்டலம் கசக்குதா?” என்ற ரீதியில் எழும் இந்த அதிருப்திக் குரல்கள், வரும் தேர்தல்களில் அதிமுகவின் ஒற்றுமையைப் பாதிக்குமோ என்ற அச்சத்தை அக்கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

3 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

4 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago