சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் கருணாகரன். 51 வயதான இவர் கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வாசலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்துள்ளது. பில்லி சூனியம் வைத்தது போல மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடந்ததை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள்.
அதில் கருணாகரன் வசிக்கும் வீட்டின் அருகே சிறிது தொலைவில் சுடுகாடு உள்ளதும் அங்கிருந்து மண்டை ஓடும் மற்றும் எலும்புகளை எடுத்து வந்து மர்ம நபர்கள் யாரோ அவர் வீட்டின் வாசல் முன்பு வைத்துவிட்டு சென்றிருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக கருணாகரனை பயமுறுத்துவதற்காக மனித மண்டை ஓடு, எலும்புகள் வைத்து பில்லி சூனியம் செய்துவிட்டு யாரேனும் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…