அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (Ex-MP) இளவரசன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைமைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து 11 முறை தேர்தல் தோல்விகளைச் சந்தித்தபோதிலும், அதற்கான உண்மையான காரணங்கள் குறித்து கட்சிக்குள் இதுவரை எந்தவொரு ஆராய்வோ அல்லது சுயபரிசோதனையோ செய்யப்படவில்லை என்று மிகக் கடுமையான சாடியுள்ளார்.
மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்தத் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி கே. பழனிசாமி (EPS) எவ்விதப் பொறுப்பையும் ஏற்க முன்வரவில்லை என்றும், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருப்பதாகவும் தனது விலகல் கடிதத்தில் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…
மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…
சென்னையை அடுத்த கே.கே. நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்து வாழ்வதால் தனது தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து…
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று செங்கல்பட்டு குடும்ப நல…
பென்சில்வேனியாவில் சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 37 வயதான நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…