அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (Ex-MP) இளவரசன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைமைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர்ந்து 11 முறை தேர்தல் தோல்விகளைச் சந்தித்தபோதிலும், அதற்கான உண்மையான காரணங்கள் குறித்து கட்சிக்குள் இதுவரை எந்தவொரு ஆராய்வோ அல்லது சுயபரிசோதனையோ செய்யப்படவில்லை என்று மிகக் கடுமையான சாடியுள்ளார்.
மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் இந்தத் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி கே. பழனிசாமி (EPS) எவ்விதப் பொறுப்பையும் ஏற்க முன்வரவில்லை என்றும், கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருப்பதாகவும் தனது விலகல் கடிதத்தில் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
