“ஆட்டோ டிரைவர் மகள் டு இன்ஸ்டா ஸ்டார்!.. காதலன் செய்த துரோகம் உண்மையா?.. ₹9.5 லட்சம் UPI ஆதாரத்துடன் வக்கீல் கொடுத்த அதிரடி ட்விஸ்ட்”..!!

By Muthu Mani on வைகாசி 29, 2026

Spread the love

பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான ரோனிஷா சட்டி என்ற இளம் பெண், இரண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டுவிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலை முயற்சிக்குக் காரணம் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பிரசாந்த் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரசாந்த் தனக்கு எதிராகப் போலி சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பரப்பி ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தியதாக ரோனிஷாவின் தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், தையல் வேலை மற்றும் ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தங்களுக்குப் போலீசார் உதவவில்லை என்றும், பிரசாந்த் தங்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இக்குற்றச்சாட்டுகளை பிரசாந்த் சர்மாவின் வக்கீல் முற்றிலும் மறுத்துள்ளார். கடந்த 2024 நவம்பரில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், இப்பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகக் கூறி தங்களை நம்ப வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் சொகுசு ஷாப்பிங் மற்றும் துபாய் பயணங்களுக்காகப் பிரசாந்த் அவளுக்கு நகைகள் மற்றும் யுபிஐ (UPI) வழியாக 9.5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பியுள்ளார். ஒருகட்டத்தில் திருமணத்தைத் தள்ளிப்போட்ட இப்பெண், தங்களின் ஆசைகள் நிறைவேறியதால் திருமணம் செய்ய முடியாது எனக் கூறியதாக வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

இதனால் சந்தேகமடைந்த பிரசாந்த் நீதிமன்றத்தை நாடியபோதுதான், அந்தப் பெண்ணிற்கு இன்னும் முதல் கணவரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏமாற்று வேலை (Cheating) செய்ததாகப் போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், தற்கொலை முயற்சி என்பது எதற்கும் தீர்வாகாது என்றும், பாதிப்புகள் இருந்தால் அதைச் சட்டப்படிதான் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்றும் பிரசாந்தின் வக்கீல் தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பெண் ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.