ஈரோடு மாவட்டம் லக்காபுரம் பகுதியில், 12 வயது பேரனுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 46 வயது பாட்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்து வரும் அச்சிறுவனை, பெற்றோர் வெளியூர் செல்லும் நேரங்களிலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் பாட்டி வீட்டில் விட்டுச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக அந்தப் பாட்டி சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் வழக்கம் போல பாட்டி வீட்டிற்குச் செல்லுமாறு பெற்றோர் கூறியபோது, அச்சிறுவன் அங்கு செல்ல மறுத்து கதறி அழுதுள்ளான். பெற்றோர் பதறியடித்துக் காரணம் கேட்டபோது, பாட்டி தனக்குச் செய்து வந்த அக்கிரமங்களை சிறுவன் வெளிப்படுத்தியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அச்சிறுவனின் பாட்டியைக் கைது செய்து போக்சோ பிரிவின் கீழ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக…
அகமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியில் அதிவேகமாக வந்த பல்சர் பைக் மோதியதில், பெண் ஒருவர் சுமார் 10 அடி தூரம் இழுத்துச்…