தொடர் பண்டிகை வரும் காரணத்தினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தை முன்கூட்டியே தர இருப்பதாக மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலம் தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் பண்டிகை காரணத்தினால் பொருளாதார சௌகரியத்தை கருதி குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடும் விதமாக திட்டத்தை விதிக்கப்பட்டிருக்கிறது என்று அரசு கூறியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிதி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றே மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மகாராஷ்டிராவில் பெரிய விழாவாக கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகை ஒரு வாரத்திற்கு தொடங்கும் பலகாரம், இனிப்புகள் போன்ற சமைத்து சாப்பிடுவார்கள். முன்கூட்டியே சம்பளம் கொடுக்க காரணம் இதுதான்.
கேரளாவில் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடுவார்கள். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்றே அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஊதியதாரர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை கொடுக்கயுள்ளார்கள். அதேபோல் அரசு ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை மட்டுமே முன்கூட்டி தரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…