பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் ‘மா வைஷ்ணோ’ என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிற்பகல் வேளையில் முகத்தில் துணியை சுற்றிக்கொண்டு வந்த 2 சிறுமிகள் சாதாரண வாடிக்கையாளர்களைப் போல கடைக்குள் நுழைந்துள்ளனர்.
அவர்கள் நகை வாங்குவது போல நடித்து, கடைக்காரரிடம் நகைகளைக் கேட்டுள்ளனர். கடைக்காரர் அவர்களை நம்பி நகைகளை வெளியே எடுத்து காட்டியபோது, எதிர்பாராத விதமாக அந்தப் பெண்ணில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மிளகு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து, கடைக்காரரின் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார்.
இதனால் நிலைகுலைந்த கடைக்காரர், உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு வேகமாக நீரை எடுத்து முகத்தைக் கழுவினார். பின்னர் கடையை விட்டு வெளியே ஓடி வந்து, உடனடியாக கடையின் ஷட்டரை கீழே இழுத்து மூடி திருடர்களை உள்ளேயே பூட்டினார். இதைத்தொடர்ந்து கடையின் ஊழியர்கள் அபாய ஒலி எழுப்பியதால், சத்தம் கேட்டு அங்கிருந்த உள்ளூர் மக்கள் கடையின் முன்பு திரண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…