Categories: சினிமா

இசை ஒழுங்கா பண்ணலன்னா அந்த படம் மாதிரிதான் ஆகும்… பங்கமாக அனிருத்தைக் கலாய்த்த கங்கை அமரன்!

Spread the love

தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை அமரன்.  பாடல் எழுதுவது, இசையமைப்பது, இயக்குனர், நடிகர் என பல துறைகளில் வெற்றி கண்டவர் கங்கை அமரன்.

தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் அவர் வெற்றிகளை சுவைத்தார். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஆல்டைம் கமர்ஷியல் வெற்றிப் படமாக உள்ளது. அவர் எழுதிய ஆயிரக் கணக்கான பாடல்கள் கிளாசிக்காக அமைந்துள்ளன. தான் பிஸியாக இசையமைத்துக் கொண்டிருந்த போது தன்னை இயக்குனர் ஆக்கியது தன்னுடைய அண்ணன் இளையராஜாதான் எனக் கூறியுள்ளார் கங்கை அமரன்.

அதன் பின்னர் அவர் இயக்கிய கோயில்காளை, கரகாட்டக்காரன், சின்னவர் உள்ளிட்ட படங்கள் சூப்பர்ஹிட்டாகின. அதன் பின்னர் தன்னுடைய மகன் வெங்கட்பிரபுவைக் கதாநாயகன் ஆக்கி அவர் எடுத்த பூஞ்சோலை திரைப்படம் ரிலீஸாகவே இல்லை. அதன் பின்னர் அவர் சினிமாவில் பாடல் ஆசிரியராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

#image_title

சமீபகாலமாக படங்களில் இடம்பெறும் இசையை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். இசையில் இரைச்சல் அதிகமாகிவிட்டதாகவும், மேற்கத்திய இசைதான் தாக்கம் செலுத்துவதாகவும் கூறிவருகிறார். இந்நிலையில் பின்னணி இசையின் முக்கியத்துவம் குறித்துப் பேசியுள்ள கங்கை அமரன் “எம் எஸ் விஸ்வநாதன் இசையில் காட்சிக்குப் பொருத்தமாக இருக்கும். அவர் படங்களைப் பார்த்தால் இசை அதிகமாக இருக்கும்.

ஆனால் இளையராஜாவின் இசையைப் பார்த்தால் அதில் கூடுதலாக ஒன்று இருக்கும். அவர் சில இடைவெளிகளை விட்டு மீண்டும் இசையைத் தொடங்குவார். அப்போது ரசிகர்கள் அதை உணரத் தொடங்குவார்கள். இசை என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய விஷயம். அப்படி செய்யலன்னா இந்தியன் 2 போல இரைச்சல் ஆகிடும்.”எனக் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

“செம சூப்பர் பாஸ்”… சங்கீதா மீதான காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தளபதி விஜய்… இணையத்தை அதிரவைக்கும் பழைய பேட்டி…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கும், சங்கீதாவுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள…

5 minutes ago

நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு செக்…! இனி சமரச பேச்சுக்கு இடமில்லை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் தவெக ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் மரிய வில்சனுக்கும், புதுச்சேரியில் வசிக்கும் அவரது தம்பி மரிய கிளோத்துக்கம் இடையே நீண்டநாட்களாகச்…

5 minutes ago

என்ன தைரியம் இருந்தா… என் பொண்ணு மேல கையை வைப்ப?… உணவகத்தில் தவறாகப் புரிந்து… முதியவரைத் தாக்கிய தந்தை… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

சிங்கப்பூர் உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும் அவசர முடிவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுமியின் தலைமீது முதியவர்…

7 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… வெந்திரா கால்வாயில் நீந்தச் சென்ற… 5 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டு… 2 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…

10 minutes ago

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

28 minutes ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

31 minutes ago