கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு ஈரோட்டில் பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிரபல கல்லூரியில் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் திரைத்துறையில் 2012 ஆம் ஆண்டு கால்பதித்தார்.
காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்ணே மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் பிசியாக நடிக்க தொடங்கினார்.
தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சந்திப் ஷாமின் வேழம் என்ற திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய நடிப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் அடிமை.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். மறுபக்கம் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
ஐஸ்வர்யா மேனன் சினிமா துறையில் களம் இறங்கியது 2012 ஆம் ஆண்டு என்றாலும் அதற்கு முன்னதாகவே பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற நாடகத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தான் சினிமாவில் நுழைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது அவர் ரசிகர்களை மயக்கும் க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…