#image_title
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் விரும்பி வழிபாடு செய்யும் ஒரு தெய்வம் தான் வராஹி அம்மன். வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் உடனே பலன் கிடைக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். அப்படி வராஹி அம்மனை எந்த கிழமையில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.
பொதுவாக வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த திதியாக சொல்லப்படுவது பஞ்சமி. இந்த பஞ்சமி திதியில் வராஹி அம்மன் சிலை அல்லது போட்டோவை வைத்து வராஹி தேவியின் காயத்ரி மந்திரம் கூறி நல்லெண்ணய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் வைத்து கிழங்கு வகைகள் பால் ஆகியவற்றை வைத்து நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்தால் நினைத்தது உடனே நிறைவேறும்.
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கிழமைகளிலும் வராஹி அம்மனை வழிபாடு செய்யும்போது அது வெவ்வேறு பலன்களை தருவதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும்போது தீராத நோய்கள் தீரும். திங்கட்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும்.
செவ்வாய்க்கிழமையில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்யும்போது வீடு நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதன் கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடன் தொல்லைகள் தீரும். வியாழக்கிழமை வராஹி அம்மனை வழிபாடு செய்தால் குழந்தை பேறு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்யும்போது நாம் நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும். சனிக்கிழமை வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் கல்வி ஞானம் போன்றவை கிடைக்கும். குழந்தைகள் கல்வி மேம்படும். வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது இனி எதுவுமே இல்லை என்று தீராத மனவேதனை கஷ்டங்களில் இருப்பவர்கள் வராஹி அம்மனை மனமுருகி வேண்டினால் நிச்சயம் நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றியைத் தருவாள் வராஹி தேவி.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…