#image_title
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் விரும்பி வழிபாடு செய்யும் ஒரு தெய்வம் தான் வராஹி அம்மன். வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் உடனே பலன் கிடைக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். அப்படி வராஹி அம்மனை எந்த கிழமையில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.
பொதுவாக வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த திதியாக சொல்லப்படுவது பஞ்சமி. இந்த பஞ்சமி திதியில் வராஹி அம்மன் சிலை அல்லது போட்டோவை வைத்து வராஹி தேவியின் காயத்ரி மந்திரம் கூறி நல்லெண்ணய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் வைத்து கிழங்கு வகைகள் பால் ஆகியவற்றை வைத்து நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்தால் நினைத்தது உடனே நிறைவேறும்.
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கிழமைகளிலும் வராஹி அம்மனை வழிபாடு செய்யும்போது அது வெவ்வேறு பலன்களை தருவதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும்போது தீராத நோய்கள் தீரும். திங்கட்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும்.
செவ்வாய்க்கிழமையில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்யும்போது வீடு நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதன் கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடன் தொல்லைகள் தீரும். வியாழக்கிழமை வராஹி அம்மனை வழிபாடு செய்தால் குழந்தை பேறு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்யும்போது நாம் நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும். சனிக்கிழமை வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் கல்வி ஞானம் போன்றவை கிடைக்கும். குழந்தைகள் கல்வி மேம்படும். வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது இனி எதுவுமே இல்லை என்று தீராத மனவேதனை கஷ்டங்களில் இருப்பவர்கள் வராஹி அம்மனை மனமுருகி வேண்டினால் நிச்சயம் நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு வெற்றியைத் தருவாள் வராஹி தேவி.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் சந்தித்த நச்சுத் தன்மையுள்ள காதல் உறவைப் பற்றியும், அதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் பற்றியும்…