தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த சிலர், சிகரெட் பற்ற வைப்பதற்காகப் புவனியிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதற்குப் புவனி தீப்பெட்டி தர மறுத்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றிப் பயங்கர மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், கண் இமைக்கும் நேரத்திற்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்துப் புவனி மற்றும் அவரது நண்பர் ஆயிஷ் ராமைச் சரமாரியாகக் குத்திச் சாய்த்தது.
இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சரிந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட புவனி சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலிஸார், கொலையில் தொடர்புடைய நரேஷ், தருண் உட்பட 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…
பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…
சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் "மாவீரர் மக்கள் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா எழுச்சியுடன்…
கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த கூட்டணித் தோழனாகத் திகழ்ந்த திமுக, தற்போது தேசிய அரசியலில் ஒரு…