#image_title
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நேற்று , சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் , தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
#image_title
இவர்கள் மட்டுமின்றி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் , சூர்யா , தனுஷ், கார்த்திக், நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும் கலந்துகொண்டனர். இந்த விழாவானது கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ‘கலைஞர் 100 விழா’ நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பொது மக்கள் பார்ப்பதற்கு வசதியாக இந்த நிகழ்ச்சியை எல்இடி திரையிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
#image_title
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், ‘கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. எந்திரன் படத்தை அவருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தை ரசித்து ரசித்து பார்த்தார் அதைப்பார்த்து நானே வியந்துவிட்டேன்’ என்று கலைஞரை புகழ்ந்து பேசினார். இதனை நடிகர் தனுஷின் முன்னாள் மாமனாரான நடிகர் ரஜினி ரசித்து பார்த்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…