#image_title
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நேற்று , சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் , தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
#image_title
இவர்கள் மட்டுமின்றி முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் , சூர்யா , தனுஷ், கார்த்திக், நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினரும் கலந்துகொண்டனர். இந்த விழாவானது கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் ‘கலைஞர் 100 விழா’ நேற்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பொது மக்கள் பார்ப்பதற்கு வசதியாக இந்த நிகழ்ச்சியை எல்இடி திரையிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
#image_title
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், ‘கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. எந்திரன் படத்தை அவருடன் சேர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தை ரசித்து ரசித்து பார்த்தார் அதைப்பார்த்து நானே வியந்துவிட்டேன்’ என்று கலைஞரை புகழ்ந்து பேசினார். இதனை நடிகர் தனுஷின் முன்னாள் மாமனாரான நடிகர் ரஜினி ரசித்து பார்த்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…