திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு அவரது பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலி தொழிலாளியான அண்ணாமலை என்பவர், மது போதையில் தனது சொந்த மகளிடமே இந்த பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூற, அவர் உடனடியாக திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், தந்தை அண்ணாமலை மது போதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரைக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அண்ணாமலையை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில், பெற்ற மகளுக்கே பாலியல் கொடுமை இழைத்த அண்ணாமலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…