2 குழந்தைகளுக்கு தந்தையான நபரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்த மகள்… இரவோடு இடவாக தந்தை செய்த கொடூரம்…!

Spread the love

சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அடுத்த சித்தர் கோவில் அருகே சிவராஜ் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு திருநெல்வேலி வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகள் வர்ஷினி (24) இறுதியாண்டு ஹோமியோபதி மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி அருகே உள்ள பகுதியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் தோழியுடன் வாடகைக்கு தங்கி இருந்தார்.

இந்நிலையில் அவருடைய தோழி ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை அறைக்கு வந்த போது படுக்கையிலேயே வர்ஷினி உயிரிழந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தோழி சக நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி விஷம் குடித்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வர்ஷினியின் தந்தை வரதராஜன் நேற்று இரவு மகள் வர்ஷினியின் அறைக்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அவருடைய செல்போன் எண்ணுக்கு போலீசார் அழைத்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் வர்ஷினி ஒருவரை காதலித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தந்தை வரதராஜனுக்கு பிடிக்கவில்லை. மாணவியின் எல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது தனியாக வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த காதல் விவகாரம் வர்ஷினியின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் மகளின் விடுதிக்கு வந்த வரதராஜன் அவரிடம் காதல் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு மறுநாள் காலை வர்ஷினியின் தோழி வந்து கதவை திறந்த போது கதவு வெளிப்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. கதவைத் திறந்து பார்த்த போது தான் வர்ஷினி இறந்து கிடந்துள்ளார். எனவே வர்ஷினியை அவருடைய தந்தை தான் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கும் நிலையில் அவரை தேடி வருகின்றன. இந்த கொலை ஆணவக் கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ்…! ஆனா இத்தனை கண்டிஷன்களா…? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…

1 மணத்தியாலம் ago

சொந்த வீடு கனவு நனவாகப்போகுது…! 50 லட்சம் லோன் வாங்க நீங்க தகுதியானவரா…? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…

1 மணத்தியாலம் ago

“அன்று ஜெயலலிதாவிடம் அப்படி… இன்று ஏன் இப்படி?”… விஜய்யின் கடந்த காலத்தை தோண்டி எடுத்த சரத்குமார்….!

கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…

2 மணத்தியாலங்கள் ago

உங்க PF பதிவுகளில் தப்பு இருக்கா…? திருத்த போறீங்களா…? லிஸ்டில் சேர்ந்த புதிய ஐடி கார்டு…. ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்…!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…

2 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலினுக்கு செக் வைத்த கூட்டணி கட்சிகள்…. தொகுதிப் பங்கீட்டில் வெடித்த புதுப்போர்… அதிர்ச்சியில் அறிவாலயம்….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…

2 மணத்தியாலங்கள் ago

மாணவர்களுக்கு ஷாக்… நாளை பள்ளிகள் விடுமுறை கிடையாது… அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு…!

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago