ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய அடையாள அட்டையை அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. திருநங்கையர் நலனுக்கான தேசிய இணையதளம் மூலம் பெறப்படும் இந்தச் சான்றிதழ், இனி இ.பி.எஃப் பதிவுகளில் திருத்தங்கள் செய்யச் செல்லுபடியாகும். ஏற்கனவே இதற்காக நடைமுறையில் உள்ள 18 வகையான ஆவணங்களின் பட்டியலில், தற்போது இந்த அடையாள அட்டையும் ஒரு முக்கிய அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநங்கையர் சமூகத்தைச் சேர்ந்த பி.எஃப் உறுப்பினர்கள், தங்களது தனிப்பட்ட விவரங்களை மாற்றிக் கொள்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கி, மிக எளிதாகவும் விரைவாகவும் சேவைகளைப் பெற முடியும். பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுக்கு இணையாக இந்த அடையாளச் சான்றிதழும் இனி பி.எஃப் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத்…
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கின் தொடர்ச்சியாக, அதன் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அதிமுகவில் இருந்து மேலும் 7 சட்டமன்ற…
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசர் தாலுக்கா கிராமம் ஒன்றில், பெற்ற தந்தையே தனது 13 வயது மகளைப் பாலியல்…
ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…