CINEMA
“அவர் இப்போ இருந்தா..? இப்படிதான் பண்ணுவேன்”…. அழுது கொண்டே பேசிய எதிர்நீச்சல் தாரா….!!
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் எதிர்நீச்சல் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர். சீரியல் தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மனதில் நடிகர் மாரிமுத்து ஹீரோ தான். சீரியலில் தனது இரண்டாவது தம்பி கதிரின் மகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறுமி தாரா நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து கூறியதாவது, “எனக்கு அவர்தான் ரியல் பெரியப்பா.
எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். அவர பாக்கணும் போல இருக்கு. அவர் சீன்ல தான் ரொம்ப கோபமாய் இருப்பார். நிஜத்தில் அங்க ரொம்ப ஸ்வீட்டா பேசுவாரு அவரு என்கிட்ட எப்பவும் ஜாலியா பேசுவாரு, விளையாடுவாரு. என்ன நடிப்பழகி என்று தான் கூப்பிடுவாரு. அவர் என்கிட்ட இருந்தா இப்ப கட்டிபுடிச்சி இருப்பேன். அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்” என கூறியுள்ளார்.
View this post on Instagram