குற்றாலம் பேரருவியில் குளித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அரவணைத்த அருவியில் பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

Spread the love

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் குளித்த ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவரின் மனைவி பரிதாள் பீவி (51). இவர் சனிக்கிழமை அன்று தனது சகோதரி சபுராளுடன் குற்றாலம் அருவிக்குச் சுற்றுலா வந்துள்ளார்.

குற்றாலம் பேரருவியில் பரிதாள் பீவி உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்குக் கடுமையான குளிரும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அருவியிலிருந்து வெளியே வந்த அவர், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு உடனடியாக தென்காசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பரிதாள் பீவி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குற்றாலம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பரிதாள் பீவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

10 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

30 minutes ago

யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்… ரூ.1 லட்சம் பரிசு வாங்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…!

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…

41 minutes ago

போலி ‘திருமண ஒப்பந்தம்’… மதம் மாற கட்டாயம்… உத்திரபிரதேசத்தில் அம்பலமான வீட்டு முதலாளியின் கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

51 minutes ago

மனைவியின் அந்த ஒரு பழக்கம்… கோபத்தில் கணவன் செய்த விபரீதம்… : 12 நாட்கள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை… கணவன் வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…!

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…

1 மணத்தியாலம் ago

அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு பலியான உயிர்… நெல் மூட்டைகளுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி இறந்த பெண்… தஞ்சை நெல் கிடங்கில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…

1 மணத்தியாலம் ago