சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

Spread the love

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தாகி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த கயல்விழி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமி மட்டும் தந்தை மற்றும் சித்தி கயல்விழியுடன் வசித்து வந்த நிலையில், அந்த குழந்தைக்கு நரக வேதனை காத்துக்கொண்டிருந்தது.

சிறுமி என்றும் பாராமல் சித்தி கயல்விழி தொடர்ந்து அந்த குழந்தையை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்து வந்துள்ளார். சுடுநீரை உடலில் ஊற்றுவது, கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி உடலில் சூடு வைப்பது, அடித்துத் துன்புறுத்துவது என கயல்விழியின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. அதோடு நின்றுவிடாமல், “ரயில்வே தண்டவாளத்தில் போய் விழுந்து செத்துவிடு” என்று அந்த பிஞ்சு மனதைக் காயப்படுத்தி மிரட்டியும் வந்துள்ளார். கயல்விழி குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் போதெல்லாம் அந்த சிறுமி அலறித் துடித்த சத்தம் அக்கம் பக்கத்தினருக்குத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, குழந்தை உடலில் இருந்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கயல்விழியிடம் தட்டிக்கேட்டபோது, “இது எங்கள் குடும்ப பிரச்சினை, நான் அடிப்பேன், திட்டுவேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன். உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்” என்று அலட்சியமாகவும் திமிராகவும் பதிலளித்துள்ளார். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று அஞ்சிய பொதுமக்கள், உடனடியாக “Childline 1098”-க்கு தகவல் கொடுத்து குழந்தையைக் காப்பாற்ற முன்வந்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை மீட்டு, மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றம் என்பதால், இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெற்ற தீவிர விசாரணையில், சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆதாரங்களின் அடிப்படையில் சித்தி கயல்விழி மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

43 minutes ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

45 minutes ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

1 மணத்தியாலம் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

2 மணத்தியாலங்கள் ago