மனைவியின் அந்த ஒரு பழக்கம்… கோபத்தில் கணவன் செய்த விபரீதம்… : 12 நாட்கள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை… கணவன் வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…!

Spread the love

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் பெண்ணின் அடையாளம் தெரியாததாலும், உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதாலும் பெரும் மர்மம் நீடித்தது. குற்றவாளிகளை விரைந்து கண்டறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.

தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிர தகவல் சேகரிப்பின் பலனாக, சுமார் 12 நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷா (25) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது கணவர் ஜெகன் பிரதானுடன் கோவைக்கு வந்து தங்கி, பல்வேறு கட்டுமானப் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. வர்ஷாவின் மரணத்திற்குப் பிறகு அவரது கணவர் திடீரென மாயமாகி இருந்ததால், அவர் மீதான சந்தேகம் வலுத்தது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஒடிசாவில் பதுங்கியிருந்த ஜெகன் பிரதானை அதிரடியாகக் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், வர்ஷா அடிக்கடி வேறு ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததாக ஜெகன் சந்தேகமடைந்ததும், இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. சம்பவத்தன்றும் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ஜெகன் தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஆரம்பத்தில் சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. சடலத்தைக் காட்டுப்பகுதிக்கு எப்படிக் கொண்டு சென்றார் என்பது குறித்து ஜெகனிடம் மதுக்கரை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

“6 நாட்களாக எங்கே போனார் செந்தில் பாலாஜி?”…. லுக் அவுட் நோட்டீஸ் பின்னணியில் இருக்கும் தமிழக அரசியல் பூகம்பம்…. அர்ஜுன் சம்பத் உடைத்த அதிரடி உண்மை….!

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…

7 minutes ago

BIG BREAKING: “பதவியை ராஜினாமா செய் இல்லனா”…. மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மிரட்டல்?… வெளியான பகீர் ஆடியோ….!

திமுகவுக்கு எதிரான குதிரை பேர வழக்கில் மேலும் பரபரப்பை கூட்டும் வகையில், தமிழக அரசியலில் ஒரு புதிய ஆடியோ சர்ச்சை…

14 minutes ago

தலைமைச் செயலகத்தில் திடீரென பதறிய அன்புமணி ராமதாஸ்.. அமைச்சர் ஆனந்த் செய்த ‘அந்த’ காரியம்… அதிர்ச்சி திருப்பம்…..!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விழிப்புணர்வு…

18 minutes ago

“ஆட்சியை கவிழ்க்க சதி”…. செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு வலைவீசும் போலீஸ்…. சற்றுமுன் ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது…

24 minutes ago

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

44 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

1 மணத்தியாலம் ago