தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்து ஊருக்குச் செல்வதும், சொந்த ஊர்களில் இருந்து வேலைக்கு சென்னை வருவதும் பல காலமாக நடந்து வரும் செயல்தான். தற்போது அதிகரித்துவரும் மக்கள் தொகை காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. விடுமுறைக் காலங்களில் சொந்த ஊர் சென்று வருவது என்பது போருக்குச் சென்று வருவதைப் போல மாறி வருகிறது. மணிக்கணக்கில் டிக்கெட் கவுண்டரில் நிற்பதும், பல மணி நேரம் பஸ்சுக்காக காத்துக் கிடப்பதும் சென்னையின் அடையாளமாகவே மாறிவிட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமையாலும், சென்னை நகருக்குள் செல்ல முறையான பேருந்துகள் வசதி, ரயில் நிலையம் இல்லாததாலும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றி கிளாம்பாக்கத்தில் கொண்டு வந்ததால் வெளியூர் செல்லும் பயணிகள் நிலை அந்தோ பரிதாபம் தான்.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் போது இந்த ரூட்டில் பயணம் செய்யுங்கள். மிக எளிதாக சென்னை நகரின் அனைத்து இடங்களையும் விரைவில் அடைந்து விடலாம். அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது.
இதனால் தான் மாத்திரைகள் அலுமினிய கவரால் பேக்கிங் செய்றாங்களா..? வியக்க வைக்கும் டெக்னிக்..