CINEMA
20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!
தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாக இருக்கும். சில நேரங்களில் மொழியை விட இசை சிறந்ததாக இருக்கும். இதை புரிந்து கொள்பவன் ஞானி புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என தெரிவித்திருந்தார்.
இதை பார்த்த இசையமைப்பாளர் கங்கை அமரன் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. நல்ல புத்தி இல்லை, வாயை பொத்திகிட்டு இருக்கணும், இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக வைரமுத்து ட்விட் ஒன்றையும் போட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த விவாதத்தில் சீனு ராமசாமி ஒரு விஷயத்தை தெரிவித்து இருக்கின்றார். அவர் கூறியதாவது உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்ப்பது இளையராஜா அவர்கள் தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல ட்யூன்களுக்கு நிறைய டம்மி ரிலிக்ஸ் ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா எனக் கூறியிருந்தார்.
உண்மையில் வைரமுத்து அவர்களை
வளர்த்தது இளையராஜா அவர்கள்தான்வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில்
யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய
Dummy lyrics ஓகே பண்ணி
அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர்
இளையராஜா அவர்கள் @gangaiamaren ❤️🙏🏽— Seenu Ramasamy (@seenuramasamy) May 3, 2024
இதை பார்த்த கஸ்தூரி ட்விட் செய்திருந்தார். அதை தொடர்ந்து அதற்கு பதில் அளிக்கும் விதமாக சீனு ராமசாமியும் பதில் ட்விட் போட்டுள்ளார். இப்படி மாறி மாறி தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.