Connect with us

CINEMA

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர் நடிகைகளே தமிழ்நாட்டில் புகழ் பெற்று இருக்கிறார்கள். தமிழ் பேச தெரிந்த ஒரு சில நடிகைகள் மட்டுமே இப்போது வரை சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

   

அப்படி நன்கு தமிழ் பேசக்கூடிய நடிகைகள் கேப்ரில்லா கருப்பு நிறம் கொண்ட இவர் சினிமாவில் நுழைந்து கதாநாயகியாக கலக்கி வருகிறார். சீரியல் என்றாலே சன் டிவி தான் என்ற அளவுக்கு பல சூப்பர் ஹிட் சீரியல் கொடுத்து வருகின்றது. சிங்க பெண்ணே, எதிர்நீச்சல், கயல், சுந்தரி, இனியா போன்ற மெகா தொடர்கள் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகின்றன.

அப்படி சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார் கேப்ரில்லா. நடிப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியில் வந்து பல போராட்டங்களை சந்தித்த இவர் தனக்கு என ஒரு இடத்தை பிடித்திருக்கின்றார்.

தற்போது இவர் சொந்தமாக நடிப்பு பள்ளி ஒன்றை தொடங்கியிருக்கின்றார். அதற்கு கேபி சினிமா ஃபேக்டரி தியேட்டர் என பெயர் வைத்திருக்கின்றார். இதில் மே ஒன்றாம் தேதியிலிருந்து 20 பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக களமிறங்கி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top