கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை கடித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகே வீயனூர் என்ற பகுதியை சேர்ந்த பிரின்ஸ் டெம்போ டிரைவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ள நிலையில் இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் வரதட்சனை கேட்டு மாமியார் மஞ்சுவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த கணவனை மஞ்சு தட்டி கேட்ட நிலையில் மாமியார் அல்போன்சா மருமகளிடம் தகராறில் ஈடுபட்டு கல்லால் தலையில் கொடூரமாக தாக்கியது மட்டுமல்லாமல் காதை கடித்து துண்டாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மஞ்சு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை மாமியார் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…