மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பம்னௌரா பகுதியில், போதை மற்றும் ஆத்திரத்தால் ஒரு தந்தை தனது நான்கு வயது மகனையே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட லக்கன் சிங் என்பவர், மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில், லக்கன் சிங் தனது மனைவியைத் தடியால் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
தன் தாய் தாக்கப்படுவதைக் கண்ட அந்த நான்கு வயது சிறுவன், ஓடிவந்து தாயைப் பாதுகாக்க முயன்றுள்ளான். ஆனால், ஆத்திரம் கண்ணை மறைக்க, அந்தச் சிறுவன் என்றும் பாராமல் லக்கன் சிங் அதே தடியால் குழந்தையையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனும், காயமடைந்த தாயும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லக்கன் சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். ஒரு சிறு குடும்பத் தகராறும், போதையும் சேர்ந்து ஒரு பிஞ்சுயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவம் அந்த கிராமம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…