மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பம்னௌரா பகுதியில், போதை மற்றும் ஆத்திரத்தால் ஒரு தந்தை தனது நான்கு வயது மகனையே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட லக்கன் சிங் என்பவர், மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில், லக்கன் சிங் தனது மனைவியைத் தடியால் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
தன் தாய் தாக்கப்படுவதைக் கண்ட அந்த நான்கு வயது சிறுவன், ஓடிவந்து தாயைப் பாதுகாக்க முயன்றுள்ளான். ஆனால், ஆத்திரம் கண்ணை மறைக்க, அந்தச் சிறுவன் என்றும் பாராமல் லக்கன் சிங் அதே தடியால் குழந்தையையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவனும், காயமடைந்த தாயும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லக்கன் சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். ஒரு சிறு குடும்பத் தகராறும், போதையும் சேர்ந்து ஒரு பிஞ்சுயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவம் அந்த கிராமம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…
"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…