எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் எவ்வளவு பெரிய வலியமான ரோல் என்பதை தமிழக ரசிகர்கள் அறிவார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்து தான். ஆம், இயக்குனரின் சொல்லையும் தாண்டி தன்னுடைய உடல் மொழியாலும், ஏம்மா ஏய் போன்ற வசனங்களிலாலும் ஆதி குணசேகரனாக வாழ்ந்தவர் மாரிமுத்து. இவருடைய இறப்புக்கு பின் யார் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. முதலில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.
அதன்பின், மற்ற சில நடிகர்களின் பெயர் கூட அடிபட்டது. ஆனால் நடிகர் வேல ராமமூர்த்தியோ ‘தற்போது பிசியாக படங்களில் நடித்து வருவதாகவும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது, இன்னும் உறுதியாகவில்லை’ என கூறியிருந்தார். தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வைரலாகி வந்தது.
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால், ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கதையை மாற்றி அமைத்திருந்தனர். தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்துவிட்டதால், வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரிகொடுத்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவரை பெரும் தொகை சம்பளமாக கொடுத்து தூக்கி வந்துள்ளது எதிர்நீச்சல் குழு. அதன்படி இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாம். இதற்கு முன்னர் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து வாங்கிய சம்பளத்தை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியின் போது, ஜஸ்பிரித் பும்ராவின் அதிவேக யார்க்கர் பந்து…
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற…
சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக…
சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து 'கேம் ஆப் லோன்ஸ்' பட நடிகை எஸ்தர் நோரானா…
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா 'அம்மா அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத்…
பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாருடன் ராஜா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்தார். அப்போது அஜீத்குமாரை ஷூட்டிங் இடைவேளையில்…