Categories: சினிமா

ஒரே வருடத்தில் 50 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர்… நாகேஷை ஓவர்டேக் செய்த அந்த நடிகர் யார் தெரியுமா…?

Spread the love

சுருளிராஜன் தமிழ் சினிமாவின் பழம்பெறும் நகைச்சுவை நடிகர் ஆவார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்து வளர்ந்தவர் சுருளிராஜன். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம் என்பதாகும். சுருளி அருவி அருகே இருந்த முருகப்பெருமானின் ஞாபகமாக சுருளிராஜன் என்ற பெயரை திரை உலகிற்காக மாற்றி வைத்துக் கொண்டார். சிறுவயதில் இருந்தே நாடகங்களில் ஆர்வம் கொண்டிருந்த சுருளிராஜன் மதுரையில் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார் சுருளி ராஜன். சென்னையில் கலைஞரின் காகித பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுருளிராஜன். அதற்கு அடுத்ததாக சிறிய வேடத்தில் நடித்து கொண்டிருந்த சுருளிராஜன் ஆதிபராசக்தி என்ற படத்தில் சென்னை மீனவர் கதாபாத்ததில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். அதற்குப் பிறகு இவர் மிகப் பிரபலமாகி பல படங்களில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் போன்ற ஆகியோர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார் சுருளிராஜன். இயக்குனர் டி ஆர் ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் நடித்திருந்தார் சுருளி ராஜன். 1970 80களில் புகழின் உச்சியில் இருந்தால் சுருளி ராஜன்.

அந்நேரத்தில் தான் நாகேஷ் தமிழ் சினிமாவிற்கு நடிப்பதற்கு வந்தார். அவருக்கு போட்டியாக பிரபலமாக இருந்தவர் சுருளிராஜன். ராஜராஜ சோழன், ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், அன்பே ஆருயிரே, அண்ணன் ஒரு கோவில், என்னை போல் ஒருவன், நான் ஆணையிட்டால் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் சுருளிராஜன். இது மட்டுமல்லாமல் 1980 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 50 படங்களில் நடித்து நாகேஷ் அவர்களை ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார் சுருளிராஜன்.

admin

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

13 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

49 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

57 minutes ago